Tamil Sanjikai

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆலோசனை நடத்தினார்.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், அந்த துறைக்கான மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு நிறைவடைந்த ஹஜ் யாத்திரை குறித்தும், அடுத்த ஆண்டுக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், இம்மாதம் 10 முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment