Tamil Sanjikai

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டும் நியூஸிலாந்து அணி எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களத்தில் இறங்கினர் , அனால் சூரிய ஒளியால் பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டதனால் ஆட்டம் அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 49 ஓவர்கள் வரை பந்து வீச முடிவானது. வெற்றி இலக்கு 156 ஆக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் (11) ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ஆனால் தவான் 75 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் . ரோகித் ஆட்டமிழந்த பின்னர் விளையாடிய கோலி (45) ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் விக்கெட் கீப்பர் லாத்தமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராயுடு ஆட இறுதியில் ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

0 Comments

Write A Comment