Tamil Sanjikai

பிரதமர் மோடி சவுதி அரேபிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா - சவுதி அரேபியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற உள்ள 3 முக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகின்ற நவம்பர் மாதம் 2-ம் தேதி தாய்லாந்து செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.

இதனையடுத்து செயலாளர் (கிழக்கு) விஜய் தாகூர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அங்கு நடைபெற உள்ள, 16-வது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்)- இந்தியா மாநாடு, 14-வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3-வது பிராந்திய விரிவான கூட்டுப் பொருளாதார உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நவம்பர் 2-ம் தேதி முதல் 4 ம் தேதி வரை பிரதமர் மோடி தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று கூறினார்.

0 Comments

Write A Comment