Tamil Sanjikai

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், கிரிக்கெட் அணிக்கான ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மூன்று உறுப்பினர்கள் கொண்ட அந்த குழுவினருக்கு எதிராக சிலர் புகார் எழுப்பியதை அடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியமான, பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, ஏற்கனவே அந்த குழு உறுப்பினர் ஒருவர் பதவி விலகிய நிலையில், கபில் தேவும் தன் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

பலர் புகார் எழுப்பினாலும், அனைவரின் புகாரையும் சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டால் யாருமே எந்த பதவியும் வகிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள தேவ், தன்னிடம் விளக்கம் கேட்கப்பட்டதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment