Tamil Sanjikai

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக -விற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தனது அடித்தளத்தை வலுவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக மதிமுக போராடும் என்றும் வைகோ தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலின் அவசரப்பட்டு முன்மொழியவில்லை எனவும், அதில் எந்த விதமான தவறும் இல்லை என்றும் வைகோ கூறினார்.

இதேபோல் திருவாரூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

0 Comments

Write A Comment