Tamil Sanjikai

குடியரசு தினத்தையொட்டி டெல்லி அமர்ஜவான் ஜோதியில், பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிர் நீத்த வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜ்பாத் பகுதிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வருகை தந்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வருகை தந்தார். இருவரையும் பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் ரமபோசாவுக்கு முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார் மோடி.

குடியரசு தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

நாட்டை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தேசத்தை பாதுகாக்கும் பணியில் உயிர் நீத்த நசீர் வானிக்கான அசோக் சக்ரா விருதை, நசீர் வானியின் மனைவியிடம் வழங்கினார் குடியரசு தலைவர்.

ராணுவத்தில் லான்ஸ் நாயக்காக பணியாற்றிய நசீர் வானிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த ஒருவர் அசோக் சக்ரா விருது பெறுவது இதுவே முதல் முறையாகும்.

0 Comments

Write A Comment