Tamil Sanjikai

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன்-2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

ஜூலை-15ல் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022-க்குள் நிறைவேற்றப்பட உள்ளது.

மழை பெய்தாலும், விண்கலம் ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது, ஏனென்றால் விண்கலம் மழையால் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான செயல்திட்டம் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

0 Comments

Write A Comment