சர்வதேச அளவில் பிரபலமான நடிகைகள் ஒரு சிலரே உள்ளனர். அதில் முக்கியமாணவர்களில் ஒருவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தி ஒயிட் டைகர் என்கிற நெட்ஃபிளிக்ஸ் தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து பதிவிட்டுள்ள ப்ரியங்கா சோப்ரா. ஒயிட் டைகர் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட் செய்யவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. அப்படி இருக்கும்போது இங்கு வாழ்வது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments