Tamil Sanjikai

நாடு முழுவதும் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் குமரி மாவட்டத்திலும் 3 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

"பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை சேவையை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களும், தொலைபேசி நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்தன. சில இடங்களில் வழக்கம் போல் குறைவான பணியாளர்களை கொண்டு இயங்கியது.

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:

எங்களது போராட்டத்தில் பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாகர்கோவிலில் உள்ள 2 வாடிக்கையாளர் சேவை மையங்கள் பூட்டப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வாடிக்கையாளர் சேவை மையங்களும், தொலைபேசி நிலையங்களும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குலசேகரம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் ஒன்றிரண்டுநபரை கொண்டு தொலைபேசி நிலையங்கள் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Write A Comment