Tamil Sanjikai

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டு வனப்பகுதியில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த வனஉயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லைக்கெப்பியா ((Laikipia)) என்ற இடத்தில் அரிய மற்றும் அபூர்வ வகையான கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர், குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தானியங்கி கேமராக்களை பொருத்தினார்.

பவுர்ணமி வெளிச்சத்தில் கேமராவின் குறுக்கே சென்ற கருஞ்சிறுத்தை கேமராவுக்குள் சிறைபிடிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment