Tamil Sanjikai

கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி 4 ஆயிரத்து 72 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 158 கன அடியாக இருந்தது. இன்று 6 ஆயிரத்து 8 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரியில் 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 98.42 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை மேலும் உயர்ந்து 98.74 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 99 அடியை எட்டியது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

1 Comments

  1. அருமை உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் இனிதே நடைபெற்ற இந்த முகநூல் பகுதியில் சிறப்பாம்சமே

Write A Comment