Tamil Sanjikai

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.11 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த மக்களும் பீதி அடைந்தனர். சில இடங்களில் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வெப்து மக்கள் தெருக்களில் கூடியதை காண முடிந்தது.

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

0 Comments

Write A Comment