Tamil Sanjikai

தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் எப்படி சிக்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த வாரம், அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் சிறுவயது நீர்நாயின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்த வகை நீர்நாயை 40 வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையை கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து தான் ஆராய்ச்சியாளர்கள்களால் காண முடிகிறது.இதுவரை அனைத்து நீர்நாய்களும் பிடிப்பட்டு, மாட்டிக் கொண்ட மீன்கள் அகற்றப்பட்டுவிட்டன. இதற்கு ஆய்வாளர்கள் இரண்டு வகையான காரணங்களை சொல்கின்றனர்.

இந்த ஹாவாயன் மான்க் சீல்கள் உணவுக்காக, பவளப்பாறைகளையோ, மணலையோ, பாறையையோ தன் வாயையோ மூக்கையோ வைத்து முட்டும், அப்போது இந்த பாம்பு போன்ற மீன் அதன் மூக்கில் மாட்டிருக்கலாம் என்றும், அந்த மீனுக்கு தப்பி செல்ல வழி இல்லாமல் அது சிக்கியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நாய்கள் தனது உணவை கண்டுபிடித்தவுடன் மகிழ்ச்சியில் தனது உணவை அங்கும் இங்கும் தூக்கியெறியும் பழக்கம் கொண்டவை. இருந்தாலும் காரணம் எது என்று தெளிவாகவில்லை. எனவே அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், எதிர்காலத்தில் இம்மாதிரியான சூழ்நிலைகளில் நீர்நாய்களிடம் மாட்டிக் கொள்ளும் பாம்பு மீன்களை பிரித்து எடுப்பது எப்படி என்ற வரைமுறைகளை வகுத்துள்ளது குறிப்பிட தக்கது.

0 Comments

Write A Comment