Tamil Sanjikai

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகே இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இதில் அப்பகுதியில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயில் குளத்தில் கிடந்த பெட்டி போன்ற பொருளை 5 பேர் திறக்க முயன்றபோது மர்மபொருள் வெடித்ததாக கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment