Tamil Sanjikai

'பெங்களூரில் நடிகர்கள் புனித் ராஜ்குமார், நான் ஈ' சுதீப் உள்ளிட்ட கன்னட முன்னணி நடிகர்கள் 4 பேர் வீடுகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமார், புனீத் ராஜ்குமார் ஆகியோரின் வீடுகள், நான் ஈ', புலி போன்ற தமிழ் படங்களில் நடித்த சுதீப், சமீபத்தில் வெளியான, ‘கேஜிஎப்’ திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் யஷ், 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கேஜிஎப் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுரு, சி.ஆர்.மனோகர், ஜெயண்ணா ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் வியாழன் காலை முதலே சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் ஒரே நேரத்தில் 100-க்கும் அதிகமான அதிகாரிகள், 8 மணி நேரத்துக்கும் அதிகமாக இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிடத்தில் தங்க நகைகளும், பணமும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment