ஜம்முவில் இருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது. 12266 எண் கொண்ட துரந்தோ எக்ஸ்பிரெஸ் ரயில் இன்று அதிகாலை ரயில் டெல்லி ரோஹில்லா ரெயில் நிலையம் அருகே வந்தபொழுது, ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பயணிகளை மிரட்டி அவர்களிடமிருந்து கொள்ளை அடித்துள்ளனர்.
இதுபற்றி அஷ்வனி குமார் என்ற பயணி ரயில்வே வலைதளம் வழியே அளித்துள்ள புகாரில், 7 முதல் 10 மர்ம நபர்கள் அதிகாலை 3.30 மணியளவில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலின் பி3 மற்றும் பி7 ஆகிய ரயில் பெட்டிகளுக்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்தில் பயணிகளிடம் இருந்து பர்ஸ், பணம், தங்க நகைகள், மொபைல் போன்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ரயில் நின்ற 10 முதல் 15 நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
0 Comments