Tamil Sanjikai

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி எதிரே உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 1996 ல் உமா மகேஸ்வரி திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

கொலை மதியம் நடந்ததாக குறப்படுகின்றது. மகள் கார்த்திகா நாகர்கோயில் அருகே கல்லூரியில் வேலை செய்கிறார் தன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சொத்து பிரச்சனை காரணமாக இச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் மாநகர ஆணையாளர் பாஸ்கரன் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

0 Comments

Write A Comment