Tamil Sanjikai

சென்னை போரூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போரூர் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் மதிவாணன் என்பவர், அய்யப்பன்தாங்கல் பணிமனையில் அரசு பேருந்து நடத்துநராக வேலை செய்து வந்தார். வழக்கம்போல் வேலை முடித்து வந்த மதிவாணன், மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது மது அருந்தி கொண்டிருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போதை நபர்கள், மதிவாணனின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு, அவரை கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மதிவாணனை கொலை செய்தது யார்? அவருடன் மதுபானக்கடைக்கு வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment