Tamil Sanjikai

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனையான பீவென் ஜாங்கை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைப்பெற்ற காலிறுதி போட்டியில் 2-ம் நிலை வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீன - தைபே அணையை ) எதிர்கொண்டார். முடிவில் தைவான் வீராங்கனை டைசூ யிங்கை 12-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

0 Comments

Write A Comment