Tamil Sanjikai

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைரவியாபாரி நீரவ் மோடி திடீரென இந்தியாவிலிருந்து தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத்துறை அறிவித்தது.

இந்நிலையில் தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் இருப்பதாக சமீபத்தில் வீடியோ ஓன்று வெளியானது.
இதையடுத்து அவரைக் கைது செய்யவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் சஜித் ஜாவித்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீரவ்மோடியை கைது செய்து ஆஜர்படுத்துமாறு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கைது செய்யப்பட்டுள்ள நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments

Write A Comment