Tamil Sanjikai

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி நகை கடை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வணிக வளாகங்கள் மற்றும் கடைகளும் உள்ளன.

இந்நிலையில், நகை கடையில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்டரூ.40 முதல் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. நகை கடையின் பின்புறம் வழியாக துளையிட்டு கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரூ.36 கோடி மதிப்புள்ள 100 கிலோ தங்க நகைகள் கொள்ளை போய் உள்ளன. குழந்தைகள் விளையாடும் விலங்குகளின் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்தது சிசிடிவி கேமிராவில பதிவாகியுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது . இந்த கொள்ளைச் சம்பவத்தில் 5 இல் இருந்து 6 பேர் வரை ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மூன்று அடுக்குமாடி கட்டிடங்கள் கொண்ட லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையின் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிறுவனம், அருகில் உள்ள தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியைக் குத்தகைக்கு எடுத்து அதில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

0 Comments

Write A Comment