Tamil Sanjikai

தனது கட்சி நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்டதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசிய அவர், ''கொலைகாரர்களை இரக்கமின்றி கொல்லுங்கள்; அதனால் பிரச்னை வராது'' என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இந்த பேச்சு கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகாவில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாண்டியா பகுதியில் நிர்வாகியாக இருந்தவர் பிரகாஷ். இவர் நேற்று மாலை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை தொடர்ந்து பைக்கில் வந்த சிலர் அவரை இடை மறித்து, வலுக்கட்டாயமாக வெளியே வரச்சொல்லி அடித்துக் கொன்றனர்.

பின்னர் காரிலேயே அவரது சடலத்தை போட்டு விட்டு அந்த கும்பல் அப்படியே சென்று விட்டது. இந்த விவகாரம் முதல்வர் குமாரசாமிக்கு கிடைத்தபோது, அவர் ஏதோ ஆய்வுப் பணியில் இருந்ததாக தெரிகிறது.

பத்திரிகையாளர்கள் சிலர் அவரது இந்தப்பேச்சை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டதால், நேற்று நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து குமாரசாமிக்கு நெருக்கமானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பிரகாஷ் கொல்லப்பட்டது முதல்வருக்கு உணர்வு ரீதியாக கோபத்தை ஏற்படுத்தியாக அவர்கள் கூறியுள்ளனர்.

முதல்வர் குமாரசாமி கூறுகையில், ''ஒரு முதல்வராக என்னால் இடப்பட்ட உத்தரவு அதுவல்ல. ஒரு கோபத்தில் நான் அவ்வாறு பேசிவிட்டேன். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மேலும் 2 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர்.'' என்று கூறினார்.

0 Comments

Write A Comment