புதுக்கோட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருசக்கர வாகனத்தின் டேங்கில் 18 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக காட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அண்ணாசிலை அருகே உள்ள முருகப்பா ஏஜென்சிஸ் பெட்ரோல் பங்கிற்கு தனது பல்சர் 180 இருசக்கர வாகனத்தில் சென்ற சுதர்சன் என்பவர் டேங்கை நிரப்புமாறு கூறியுள்ளார்.
டேங்கை நிரப்பி விட்டு அளவை எந்திரத்தைப் பார்த்த போது 18 லிட்டர் எனக் காட்டியுள்ளது. இதற்கான ரசீதை பெற்றுக் கொண்ட சுதர்சன், தனது வாகன டேங்கின் மொத்த கொள்ளளவே 15 லிட்டர் தான், 18 லிட்டர் பெட்ரோல் எப்படி நிரப்ப முடியும் எனக் கூறி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகளும், சுதர்சனுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
0 Comments