Tamil Sanjikai

பொலிவியா நாட்டின் "புதுவருட நம்பிக்கை விழா" வழக்கமான உற்சாகத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. தாங்கள் விரும்பும் பொருட்களின் வடிவங்களை வாங்கி வைத்து, பிரார்த்தனை செய்தால், இந்தாண்டில், அந்த பொருள் தங்களுக்கு கிடைக்கும் என்பது பொலிவியா நாட்டு மக்களின் நம்பிக்கையாகும்...

இதன்படி, ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் இந்த , புதுவருட நம்பிக்கை ஆண்டுவிழாவிற்காக , லா பாஸ் நகர சந்தையில், வீடுகள், கட்டிடங்கள், பணம் போன்றவற்றின் சிறியவகை கலைவடிவங்கள், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை மிகுந்த ஆர்வத்தோடு மக்கள் வாங்கி, சமாதான மாதா தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்துவிட்டு, வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

தாங்கள் தேர்ந்தெடுத்த கலை வடிவத்திற்கு உண்டான சொத்து, தங்களை தேடி வரும் என பொலிவிய மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

0 Comments

Write A Comment