Tamil Sanjikai

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள மெந்தார் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது.

ஹாஜிபுர் செக்டார் பகுதியில் நடந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் சென்றனர் பாகிஸ்தான் ராணுவத்தினர். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment