Tamil Sanjikai

தென் ஆப்பிரிக்காவில் வரும் மே மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் வியாழன் அன்று நாடாளுன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா, தான் பதவியேற்ற ஒரு வருடத்தில் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறி பெருமிதம் அடைந்தார். மேலும் உரையாற்றிய அவர், தென் ஆப்பிரிக்காவிற்கான ஆறாவது தேர்தல் மே 8ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் தகுதி உடைய வாக்காளர்கள், வோட்டு அளிப்பதற்காக இதுவரை பதிவு செய்யவில்லை என்றால் விரைவில் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொண்டார். இந்த தேர்தலில் 80% சதவீத புதிய வாக்காளர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

0 Comments

Write A Comment