இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியா - வங்கதேச எல்லையான கோனா பகுதி வழியாக வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். இதனை கண்ட எல்லை பாதுகாப்புப்படையினர் அவர்களை சுற்று வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இந்தியா வருவதற்கான அனுமதி எதுவும் இல்லை என்பதால் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மேற்கு வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments