Tamil Sanjikai

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் தொடங்கியபின் முதன்முறையாக தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, முந்தைய அரசுகள் பாதுகாப்பு தொடர்புடைய ஒப்பந்தங்களில் ஊழலில் ஈடுபட்டன.

இதற்கு முன்பு ஆண்ட அனைத்து காங்கிரஸ் அரசுகளும் இந்த ஒப்பந்தங்களை ஏ.டி.எம். போன்று பயன்படுத்தின என காங்கிரசை குற்றம் சாட்டினார்.

எனது அரசியல் அனுபவத்தில் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் பல விசயங்கள் அதிகரித்து உள்ளன. முன்பு, யார் இந்த மோடி என மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. ஆனால் இன்று நாட்டின் ஏழை மக்களுக்கு, நாட்டு பாதுகாப்புக்கு மற்றும் பிற விவகாரங்களில் மோடி என்ன செய்துள்ளார் என்பது அவர்களுக்கு தெரியும்.

கடந்த 2014ம் ஆண்டை விட இந்த தேர்தலில் பா.ஜ.க. முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும். முன்பு எங்கள் பிரதிநிதிகள் குறைவாக இருந்த தொகுதிகளில் மக்கள் வாக்களித்து எங்கள் பலத்தை உயர்த்துவார்கள் .

இந்த 2019ம் ஆண்டு தேர்தலில் போட்டியே இல்லை. 300 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment