Tamil Sanjikai

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிந்து.இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ஐ.என்.எக்ஸ் வழக்கில், விசாரணைக்கு ப.சிதம்பரம் சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்றும் .ஆவண, ஆதாரங்கள் வைத்து கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை என்றும், எனவே ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் ஒருவாரம் அனுமதி வழங்கும்படி அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அக்.30-ம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.

ஏற்கனவே, ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்த நிலையில் தற்போது மேலும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment