Tamil Sanjikai

அரியர்ஸ் வைத்த பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட உள்ளது.

இதற்காக அக்டோபர் மாதம், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட் டுள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் அரசு பாலிடெக்னிக் கல்லூரிரிகள், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஆக்டோபர் மாதம் நடைபெறும் சிறப்புத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம். அபராதமின்றி கட்டணம் செலுத்துவதற்கான ஆகஸ்ட் 20ம் தேதி கடைசி நாளாகும்.
*150 அபராதத்துடன் ஆகஸ்ட் 29ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம், *750 அபராதத்துடன் செப்டம்பர் 24ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம். இதுதொ டர்பான கூடுதல் தகவல்களை தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளத்தில் (www.tndte.gov. in) மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment