Tamil Sanjikai

இந்தோனேஷியாவில் 14 அடி நீளமுள்ள பிரமாண்ட முதலை ஒன்று இளம் பெண்ணை கடித்து குதறி கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் வடக்கு சுலவெசி பகுதியில், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த முதலையின் இருப்பிடத்தில் இருந்து டேசி டுவோ எனும் இளம் பெண்ணின் பாதி உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

முதலையை ஆய்வு செய்ய வந்த டுவோ தவறி உள்ளே விழுந்திருக்கலாம் என்றும் அவரை முதலை கடித்துக குதறியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே பெண்ணின் பாதி உடல் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் மீறி உடல் முதலையின் வயிற்றுக்குள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த முதலைக்கு மயக்க மருந்து செலுத்தி அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

0 Comments

Write A Comment