Tamil Sanjikai

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பெஹ்ரோர் என்ற இடத்தில, கடந்த 2015-ஆம் ஆண்டு, நான்கு வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், ராஜ்குமார் என்கிற தர்மேந்திரா என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், தர்மேந்திரா மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

0 Comments

Write A Comment