Tamil Sanjikai

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை திகார் சிறையில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து கைதிகள் அழைத்து செல்லப்படும் வாகனத்தில் சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டார்.

மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி தனிச்சிறை எண் 7-இல் சிதம்பரம் அடைக்கப்பட்டதாகவும், அவருக்கு சிறையில் உணவாக சப்பாத்தி, பருப்பு, கூட்டு தரப்படும்; தனி கழிவறை உள்ளிட்ட இதர வசதிகள் வழங்கப்படும் என்று திகார் சிறை அதிகாரி சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த வசதிகளை எல்லாம் தனக்கு வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிதம்பரம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment