Tamil Sanjikai

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் பன்வாரி லால் ரோகித் உத்தரவிட்டுள்ளார். மேலும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேட்டி அளித்திருந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கையாக மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை, தமிழக அரசியலில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment