Tamil Sanjikai

சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பானிய ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம் போனது.

இந்த ஓவியத்தின் சிறப்பு அம்சம் என்னெவென்றால் பெரிய கண்களுடன், முறைப்பது போல் நிற்கும் சிறுமியின் ஒரு கையை மறைத்து இருப்பது போல் இந்த ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கிறது.

இந்த ஓவியத்தை சிலர் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலத்தை உயர்த்தினர். முடிவில் 25 மில்லியன் டாலருக்கு இந்த ஓவியம் ஏலம் போனது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 177.9 கோடியாகும்.

நியூயார்க்கில் நவம்பரில் நடைபெறவுள்ள ஓவிய ஏலத்திலும் யோஷிடோமாவின் ஓவியம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment