Tamil Sanjikai

லாவோஸ் நாட்டின் வியன்டியானே நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில், 8 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமடைந்து உள்ளனர். 8 பேரை காணவில்லை.

இந்த பேருந்தில் சீனாவை சேர்ந்த 43 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களுடன் சீன சுற்றுலா உதவியாளர் ஒருவர் மற்றும் லாவோஸ் நாட்டை சேர்ந்த ஓட்டுனர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகிய 2 பேரும் பயணித்துள்ளனர்.

பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என்றும் அதனால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் போலீசார் கூறுகின்றனர். இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

இந்த சம்பவம் பற்றி அறிந்து லாவோஸ் நாட்டில் உள்ள சீன தூதரக ஊழியர்கள் மற்றும் லுவாங் பிரபாங்கில் உள்ள சீன தூதர் விபத்து பகுதிக்கு சென்றனர்.

0 Comments

Write A Comment