மும்பை:
மும்பையில் உள்ள சத்ரபதி ஷிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஏர்- இந்தியா விமானத்தில் இருந்து தவறி விழுந்த விமான பணிப்பெண் காயமடைந்தார் என்று விமான நிலையம் தெரிவித்தது. இச்சம்பவம் இன்று காலை ஏர் இந்தியாவின் புதிய டெல்லி-பௌண்ட் விமானம் ஏஐ864இல் நடைபெற்றதாக தெரிவிக்கப் பட்டது.இச்சம்பவத்தை விமான நிலையம் "துரதிர்ஷ்டவசமானது" என்றும் இதுகுறித்து விசாரணை தொடங்க உள்ளதாக தெரிவித்தது.
" போயிங்க்-777 விமானத்தின் கதவை அடைக்கும்பொழுது ஹர்ஷா லோபோ என்ற கேபின் குழுவின் ஒருவர் காயமடைந்தார், " என்றும் . "அவருக்குக் காலில் அடிபட்டுள்ளதால் மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்" எனவும் விமான நிலையத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தைப் போன்று மூன்று வருடங்களுக்கு முன்பு, ஏர் இந்தியா பொறியாளர் ஒருவர் விமான இன்ஞினுக்குள் இழுக்கப் பட்டார். இந்த சம்பவத்தில், விமானிகள் சமிக்ஞையை தவறாக புரிந்துகொண்டதால் முன்பாகவே இன்ஞினை தொடங்கிவிட்டதே இந்த விபத்துக்கான காரணம் ஆகும்.
0 Comments