Tamil Sanjikai

இமயமலையில் 8.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகும் பயங்கர நிலநடுக்கத்தால், உத்தரகாண்ட் முதல் மேற்கு நேபாளம் வரை பாதிப்புகள் இருக்கக்கூடும் என இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் நேபாள- இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு இமயமலை சரிந்து விழக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு அறிவியல் ஆய்வு மையத்தின் புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லி தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது.

0 Comments

Write A Comment