Tamil Sanjikai

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும்.

திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை மறுநாள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். விருப்ப மனு பெறப்பட்டதன் மறுநாள் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறினார்.

0 Comments

Write A Comment