Tamil Sanjikai

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதுபோல் வைகோ பச்சோந்தி தான்; பதவிக்கு வந்தபின் காங்கிரசுக்கு எதிராக பேசுவது பச்சோந்தி குணமே என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அமித்ஷாவுக்கு பூஜை செய்யுங்கள்; ஆனால் காங்கிரசை சீண்டாதீர்கள் எனவும் இளங்கோவன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்து மாநிலங்களவையில் வைகோ பேசியதற்கு, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவில் எம்.பி. ஆன வைகோ தான் துரோகி நம்பர் 1 என்று, ஏற்கனவே, வைகோவை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment