Tamil Sanjikai

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று மவுன்ட் மாங்கானுவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த வெற்றி இலக்கான 162 ரன்களை 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 35.2 ஓவரில் எட்டியது.

ஆட இறுதியில் ஸ்ம்ரிதி மைந்தனை அதிரடியாக ஆடி 83 பந்துகளில் 90 ரன்களுடனும் கேப்டன் மித்தாலி ராஜ் நிதானமாக ஆடி 111 பந்துகளில் 63 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

0 Comments

Write A Comment