Tamil Sanjikai

சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த குற்றத்திற்காக பிக்பாஸ் புகழ் கவினின் தாயார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தமயந்தி. இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி.இவர்களும் தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ண ராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர். தில் 34 நபர்கள் சீட்டு பணம் கட்டி வந்துள்ள நிலையில் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்து விட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருட சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என 29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி இல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கவின் அவர்களின் தாயார் ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

0 Comments

Write A Comment