Tamil Sanjikai

நியூசிலாந்தில் கடலில் விழுந்த ஒருவர் தமது ஜீன்ஸ் பேன்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 6-ம் தேதி பிற்பகலில் தொலாகா பே என்ற கடற்பகுதியில் கரையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் படகு ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆர்னே முர்கே என்பவர் கடலில் தவறி விழுந்து விட அதை கவனிக்காத அவரது சகோதரர் படகில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். சற்று நேரத்தில் ஆர்னேவை காணவில்லை என்பதை அறிந்த ரோவே நகராட்சி ஹெலிகாப்டர் மீட்பு சேவைக்கு தகவல் கொடுக்க, மூன்றரை மணி நேர தேடுதலுக்குப் பின் ஆர்கே மூர்கே மீட்கப்பட்டார்.

ஆர்னே தமது ஜீன்ஸ் பேன்டையே மிதவையாகப் பயன்படுத்தி உயிர்வாழும் கலையைக் கற்றிருந்தார். எனவே, தமது ஜீன்ஸ் பேன்டில் காலின் நுனி பாகங்கள் இரண்டையும் முடிச்சுப் போட்டு, அதில் நீர், காற்று ஆகியவற்றை நிரப்பி இடுப்பு பகுதி துணியை இறுக்கி மிதவையாக பயன்படுத்தி உயிர்தப்பினார்.

0 Comments

Write A Comment