Tamil Sanjikai

சென்னையில் 107 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கிண்டி சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக சந்துரு, மயிலாப்பூர் ஆய்வாளராக செந்திமுருகன், வடபழனி சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக கண்ணன், மாம்பலம் காவல் ஆய்வாளராக பாலமுரளி, வேப்பேரி சட்டம் - ஒழுங்கு காவல்ஆய்வாளராக குணவர்மன், பல்லாவரம் ஆய்வாளராக இளங்கோவன், அடையாறு சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக கிறிஸ்டின் ஜெயசில், செங்குன்றம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக ஜவஹர், ஜே.ஜே. நகர் ஆய்வாளராக பெருந்துறை முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 18 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment