Tamil Sanjikai

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 6ம் தேதி தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

0 Comments

Write A Comment