Tamil Sanjikai

3,000 கோடி ரூபாயை மேக் இன் ஒடிசா திட்டத்தின் கீழ் ஒடிசாவில் முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில், மேக் இன் ஒடிசா மாநாடு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பேசிய முகேஷ் அம்பானி, ஒடிசாவில் ரிலையன்ஸ் குழுமம் ஏற்கெனவே 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக உறுதியளித்தார்.

மேலும், ஒடிசாவில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் 48 ஆயிரம் கிராமங்களை ஜியோ சேவை சென்றடைந்துள்ளதாகவும், கடந்த சில மாதங்களில் பெரும்பாலான கிராம மக்கள் ஜியோ சேவையை பெற்றுள்ளதாகவும், மேக் இன் ஒடிசா என்பது மேக் நியூ ஒடிசா என்பதாக மாறும் என்றும், இந்திய தகவல் தொழில்நுட்பத்தில் ஜியோ முன்னணியில் உள்ளதாகவும், உலகம் தற்போது தொழில்நுட்ப புரட்சியை சந்தித்து வருவதாகவும், இதில் ஜியோ முக்கிய பங்காற்றி வருவதாக அவர் பேசினார்.

0 Comments

Write A Comment