என் நிர்வாணம் உன்னை அச்சுறுத்துகிறதா?
நீ என்னை கொல்ல வருவாய்!வருகிறாய்…
பௌத்தனின் நிர்வாணம் இத!
பைத்தியக்காரனின் நிர்வாணம்!
அமைதியை தேடிக் கொண்டே இருக்கும்
உண்மையின் நிர்வாணம்!
நேசிக்கவும், கூடிக்களிக்கவும் காலமின்றி
அபத்தங்களிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கும்
மனநோயாளியின் நிர்வாணம்!
என் முத்தங்களை தேக்கி வைத்து
தினம் தினம் மூச்சடைத்து மரணமே மேல் என்று
யோசித்துக் கொண்டிருப்பவனின் நிர்வாணம்!
நீ என்னை நிச்சயமாய் கொல்வாய்,
ஏனெனில் நான் உண்மைகளை சுமப்பவன்!
என் நிர்வாணம் உன்னை அச்சுறுத்துகிறது
என்பதை அறிந்துக் கொண்ட அன்றே
அதை என் வாழ்நாள் முழுதும்
தூக்கி அலைய கங்கணம் கட்டிக் கொண்டேன்!
இறக்கி வைக்க இன்னொரு தோள் வரும் வரை அல்ல!
நீ என்னை கொன்றபிறகு
அங்கு நூறுபேர் வந்து
அதை பகிர்ந்து செல்லும் வரை!
மீண்டும் சொல்கிறேன்!
விரைவில் என்னைக் கொன்றுவிடு!
இந்த இயற்கையற்ற மனித உலகில்
என்போன்ற சிறுபுல்லுக்கு இடமில்லை!
மதிப்புமில்லை…
- பாலா ரா கணேஷ்
1 Comments
அருமையான பதிவு... சிறப்பு வாய்ந்த வரிகள்...