தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சோபியான் பகுதியைச் சேர்ந்த இஷ்ரத் முனீர் 25 வயதே ஆனா இந்த பெண், ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத அட்டூழியங்களை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதனால் கோபமடைந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை சுட்டு கொலை செய்தனர் மேலும் ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண் கதறும் வீடியோவையும் தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
இஷ்ரத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, அருகிலுள்ள ஷோபியான் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜைனபோராவின் டிராகா பகுதியில் போலீசார்
அவரது உடலை கண்டெடுத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments