Tamil Sanjikai

ரஃபேல் போர் விமானத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் பயணித்ததாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ரஃபேர் போர் விமானம் இந்தியாவிடம் இன்று பிரான்ஸில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்தை பெற்றுக்கொண்டார். இதையடுத்து, ரஃபேல் விமானத்திற்கு பூஜை செய்யப்பட்டு, அந்த விமானத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார்.

இந்த நிலையில், ரஃபேல் போர் விமானத்தில் பறந்த பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘ரஃபேல் போர் விமானம் மிகவும் வசதியாகவும், மென்மையாகவும் இருந்தது . இந்த விமானத்தில் பயணித்தது இதுவரை இல்லாத புதிய அனுபவமாக இருந்தது. போர் விமானத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் பயணிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment