நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. பின்னர் இது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கும், நெல்லை போலீஸ் கமிஷனருக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
அதில், கொலை எப்படி நடந்தது? கொலை செய்தவர்கள் யார்? முதல் தகவல் அறிக்கை விவரங்கள், கொலை தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு எதேனும் வழங்கப்பட்டு இருக்கிறதா? என்பன போன்ற விவரங்களை போலீசார் 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் குறித்த காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments